அஜீத்- கவுதம் மேனன்- ஏஎம் ரத்னம் புதிய படம்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு

|

சென்னை: அஜீத் நடிக்க, கவுதம் மேனன் இயக்க, ஏஎம் ரத்னம் தயாரிக்கும் புதிய படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.

ஆரம்பம் படத்தின் ஷூட்டிங் முடியும் முன்னரே, விஜயா நிறுவனத்துக்கு தன் கால்ஷீட்டைக் கொடுத்து வீரம் படத்தை ஆரம்பித்தார் அஜீத்.

அஜீத்- கவுதம் மேனன்- ஏஎம் ரத்னம் புதிய படம்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இப்போது வீரம் படம் இறுதிக் கட்டத்தில் உள்ள நிலையில், அடுத்த படம் யாருக்கு என்பதை தெளிவாக முடிவு செய்துவிட்டார்.

நாம் முன்பே குறிப்பிட்டது போல, இந்தப் படத்தை தயாரிக்கும் வாய்ப்பை ஆரம்பம் படம் தயாரித்த ஏஎம் ரத்னத்தின் சத்யசாய் நிறுவனத்துக்கே தந்துள்ளார் அஜீத்.

இயக்குபவர் கவுதம் வாசுதேவ் மேனன். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் இன்று அஜீத் சார்பில் அவரது பிஆர்ஓ வெளியிட்டுள்ளார்.

ஸ்ரீசத்யசாய் நிறுவனத்துக்காக அஜீத் நடிக்கும் படத்தை இயக்க, இன்று கவுதம் மேனன் கையெழுத்திட்டார் என்று அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

கவுதம் மேனனும் அஜீத்தும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே இணையவிருந்தனர். படத்தின் அறிவிப்பு வந்த நிலையில் கருத்து வேறுபாடுகளால் பிரிந்தனர். இப்போது மீண்டும் அந்த வாய்ப்பு கூடிவந்துள்ளது.

ஆரம்பம் படத்தைத் தயாரித்தாலும், கடன்கள் முழுமையாக அடையாமல் ஏஎம் ரத்னம் சிரமப்படுவதைப் பார்த்து அவருக்கு மீண்டும் படம் நடித்துத் தருகிறார் அஜீத் என்பது குறிப்பிடத்தக்கது.

 

+ comments + 2 comments

Anonymous
28 October 2013 at 08:12

idhuvaraikkum palapadangal arivuthu start aagatha GM
naan prodcuer illey endru poi sollum producer rathnam
padam releseaagumenney aduthapadathukku adipodum thala
operation injury endru buruda publicity vera
maanagetta pozhappu

Anonymous
28 October 2013 at 08:30

GM IS SIGNING SIMBHU
WRONG NEWS FOR PUBLICITY
WILL BE DROPPED AFTER RELEASE OF AARAMBAM

Post a Comment