சட்டப்படி விவாகரத்து பெற்றுவிட்டோம் - சரிதாவுக்கு முகேஷ் பதில்

|

சட்டப்படி விவாகரத்து பெற்றுவிட்டோம் - சரிதாவுக்கு முகேஷ் பதில்

கொச்சி: நடிகை சரிதாவை சட்டப்படி விவாகரத்து பெற்றுக் கொண்ட பிறகே இரண்டாவது திருமணம் செய்தேன், என்று நடிகர் முகேஷ் பதில் கூறியுள்ளார்.

சரிதாவை திருமணம் செய்து கொண்டு பின்னர் பிரிந்துவிட்ட நடிகர் முகேஷ் கேரளாவை சேர்ந்த நடனக் கலைஞர் தேவிகாவை காதலித்து கடந்த வாரம் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். கொச்சியில் உள்ள பதிவு அலுவலகத்தில் அவர்கள் திருமணம் நடந்தது.

இந்த திருமணத்துக்கு முகேஷின் முதல் மனைவியான நடிகை சரிதா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து சரிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், "முகேஷ் சட்ட விரோதமாக தேவிகா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக அறிந்தேன். அவருக்கும் எனக்கும் இதுவரை சட்டப்படி விவாகரத்து நடக்கவில்லை. 2007-ம் ஆண்டு முதல் அவரை விவாகரத்து செய்ய தயாராக இருந்து வருகிறேன். ஆனால் தட்டிக்கழித்தே வந்தார். விவாகரத்து பெறாமல் முகேஷ் இரண்டாம் திருமணம் செய்தது கிரிமினர் குற்றம். எனவே வழக்கு தொடரப் போகிறேன்," என்று குறிப்பிட்டிருந்தார்.

சரிதாவின் குற்றச்சாட்டுகளை முகேஷ் மறுத்துள்ளார். அவர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள விளக்கத்தில், "சரிதா குற்றச்சாட்டுகள், முற்றிலும் தவறானவை. தேவிகாவை முகேஷ் சட்டப்படி பதிவு திருமணம் செய்து கொண்டு உள்ளார். சரிதாவை சட்டரீதியாக பிரிந்ததற்கான அனைத்து ஆவணங்களையும் பதிவு அலுவலகத்தில் அதிகாரியிடம் தாக்கல் செய்துள்ளார். தேவையான ஆவணங்களை ஒப்படைத்திருக்காவிட்டால் திருமணத்தை அரசு அதிகாரி நடத்தி வைத்திருக்கமாட்டார்," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Post a Comment