கோச்சடையான்... இதுவரை 750 அரங்குகள் ரிசர்வ்!

|

சென்னை: கோச்சடையான் படம் ஜனவரி 10-ம் தேதி ரிலீஸ் என நேற்றுதான் அறிவிப்பு வெளியானது. அதற்குள் இந்தப் படத்துக்கு 750 அரங்குகளை ரிசர்வ் செய்து வைத்துவிட்டனர் அதன் உரிமையாளர்கள்.

மீதமிருக்கும் 250 அரங்குகளில் பெரும்பாலானவை ரஜினி படத்தை வெளியிட ஆர்வம் காட்டி வருகின்றன.

முன்பு எந்திரன் வெளியான போது, கிட்டத்தட்ட 900 அரங்குகள் வரை அந்தப் படத்துக்கு ஒதுக்கப்பட்டது. மல்டிப்ளெக்ஸ்களில் அத்தனை திரைகளிலும் எந்திரனே ஓடியது. மாயாஜாலின் 16 திரையரங்குகளிலும் தொடர்ந்து எந்திரன் மட்டுமே ஓடியது, முதல் இரு வாரங்களுக்கு.

கோச்சடையான்... இதுவரை 750 அரங்குகள் ரிசர்வ்!

சின்னச் சின்ன ஊர்களில் இருந்த திரையரங்குகள் கூட எந்திரனை ரிலீஸ் செய்தன. தமிழ் சினிமா வரலாற்றிலேயே தமிழகத்தில் மிக அதிக அரங்குகளில் வெளியான படம் எந்திரன் மட்டுமே. இந்த சாதனைக்கு நிகரான சாதனையைப் படைக்கவிருக்கிறது கோச்சடையான்.

இந்தப் படம் வெளியாவது குறித்து நேற்று காலைதான் செய்தி வெளியானது. அதற்குள் மொத்த திரையரங்குகள், குறிப்பாக மல்டிப்ளெக்ஸ்களும் கோச்சடையானுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

இப்போதைய நிலவரப்படி, மாநிலத்தில் உள்ள 950 திரையரங்குகளில் 750 அரங்குகள் கோச்சடையானுக்கென ரிசர்வ் செய்யப்பட்டுள்ளன.

 

Post a Comment