மும்பை: பாலிவுட் கவர்ச்சிப் புயலான சன்னி லியோன் பங்கேற்ற ரேம்ப் ஷோவால் மேடையே தள்ளாடிப்போனது இந்தியாவின் சர்வதேச நகை வார விழாவில்.
மும்பையில் நடைபெற்ற இந்த நகைத் திருவிழாவில் கலந்து கொண்டு அன்ன நடை பழகிய சன்னி லியோன், சுமித் ஜவானியின் "அபலா" என்னும் நகைகளை அணிந்து நடை போட்டார்.
இந்த ரேம்பில் " அழகு ராணி" யாக வலம் வந்து அசத்திய லியோன், "ராயல் டிரைப்" என்று பெயரிடப்பட்ட நகைகளை அணிந்து வந்தபோது, மகாராணியாகவே காணப்பட்டார்.
கருப்பு நிறத்திலான கற்கள் பதிக்கப்பட்ட கவுனில் தலையில் அழகான இரண்டு வட நெத்தி அணிகலன், கழுத்தில் மிகப்பெரிய ராணிகள் அணிவது போன்ற நெக்லஸ் மற்றும் பின்புறம் வரை நீண்ட கழுத்தணி, காலில் தண்டை, கைகளில் வளையல்கள் என்று ஒரு ராஜவம்ச ராணியாக மின்னினார் சன்னி லியோன்.
மொத்ததில் அந்த மாலை நேரத்தில் அழகில் ஜொலித்த கவர்ச்சிப் புயலால் நிறைய பேர் கரை ஒதுங்க முடியாமல் தத்தளித்தது என்னவோ உண்மைதான்.
Post a Comment