சென்னை: தாம் தூம் என்று குதிப்பதற்கு பெயர் போன அந்த பாடகி தனது நடிகர் கணவருக்கு வாய்ப்பு தேடுகிறாராம்.
பட்பட்டென்று பேசுவதற்கும், கோபம் வந்தால் தாம் தூம் என்று குதிப்பதற்கும் பெயர் போன அந்த பாடகி தான் காதலித்த நடிகரை திருமணம் செய்து கொண்டார். தனக்கு வாய்ப்பு தருபவர்களை தவிர வேறு யாரையும் கண்டு கொள்ளாதவர் பாடகி. இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு தயாரிப்பாளர்கள், இயக்குனர்களை கண்டால் இருந்துவிட்டு போகட்டும் என்று வணக்கம் சொல்கிறாராம்.
வணக்கத்தோடு நிற்காமல் தனது கணவருக்கு வாய்ப்பளிக்குமாறும் கேட்கிறாராம். இவ்வாறு அவர் வாய்ப்பு வேட்டை நடத்தியதில் கணவருக்கு புது படம் ஒன்று புக்காகியுள்ளது. அந்த படத்தின் பூஜை கடந்த 22ம் தேதி தான் நடைபெற்றது.
அந்த நடிகர் கடைசியாக நடித்தது அரசியல் வாரிசின் மனைவி இயக்கிய படத்தில் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment