தெலுங்கு நடிகர் ராணாவுடனான தன் நீண்ட கால நட்பை முறித்துக் கொண்டார் த்ரிஷா என செய்திகள் வெளியாகியுள்ளன.
இருவரும் நாட்களாக நெருங்கிப் பழகி வந்தனர். பட விழாக்களுக்கு ஜோடியாக வந்தார்கள். வெளிநாடுகளில் நடந்த பட விழாக்களுக்கும் ஒன்றாகவே சென்று வந்தார்கள்.
சமீபத்தில் மலேசியாவில் நடந்த விருது வழங்கும் விழாவில் ஜோடியாக பங்கேற்றார்கள். அருகருகே உட்கார்ந்து சிரித்து பேசிக் கொண்டும் இருந்தனர். இருவருக்கும் ரகசிய திருமணம் நடந்துவிட்டதாகவும் கிசுகிசுக்கப்பட்டது.
இந்த நிலையில்தான் தற்போது இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
ராணா நிறைய பெண்களுடன் தொடர்பு வைத்து இருந்தது திரிஷாவுக்குப் பிடிக்காததால் இந்த உறவு முறிவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இனி சினிமாவில் மட்டுமே முழு கவனமும் என்று த்ரிஷா முடிவெடுத்துவிட்டாராம். ஆனால் இதுகுறித்து ராணா, த்ரிஷா இரு தரப்பிலுமே விளக்கமறிய முயன்றோம். இருவருமே தொடர்பு எல்லைக்கு வெளியில் உள்ளனர்!
Post a Comment