மெட்ராஸ் மற்றும் கத்தி படங்களின் பாடல்கள் இயக்குநர் ஷங்கருக்கு ரொம்பவே பிடித்துப் போய்விட்டதாம்.
அதிலும் ஒரு பாடலை அடிக்கடி கேட்டுக் கொண்டே இருப்பதாக அவரே தெரிவித்துள்ளார்.
தான் என்னதான் பிரமாண்ட இயக்குநர் என்றாலும், அடுத்தவர்களின் படைப்புகளை ரசித்து கருத்து சொல்லத் தயக்கம் காட்டியதே இல்லை ஷங்கர்.
சமீபத்தில் வெளியான ‘சதுரங்க வேட்டை', ‘வேலையில்லா பட்டதாரி', ‘ஜிகர்தண்டா' போன்ற படங்களை ரசித்ததோடு, அவற்றைப் பற்றி கருத்தும் கூறியிருந்தார்.
தற்போது இந்த வரிசையில் கத்தி படமும் இணைந்து விட்டது. கத்தி படத்தில் இடம்பெற்றுள்ள பக்கம் வந்து பாடலை தினமும் கேட்டுக்கொண்டிருப்பதாக ட்விட்டரில் கருத்து வெளியிட்டுள்ளார்.
அதில், "கத்தி படத்தின் ‘பக்கம் வந்து' பாடல் ராக்கிங், தினமும் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.
அதபோல் ‘மெட்ராஸ்' படத்திலிருந்து ‘நான்... நீ', ‘சென்னை வடசென்னை' பாடல்களையும்தான். புதிதாகவும், தென்றல் போலவும் இருக்கின்றன," என்று அதில் குறிப்பிட்டிருக்கிறார்.
விஜய்-சமந்தா நடிப்பில் ஏஆர் முருகதாஸ் இயக்கியிருக்கும் படம் கத்தி. பெரிய எதிர்பார்ப்புக்கு இடையே இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகிறது.
Post a Comment