பிரதமர் நரேந்திர மோடியை விட கூகுளில் அதிகம் தேடப்பட்டவர் சன்னி லியோன். எதற்காக அவரைத் தேடினார்கள் என்பது ஓபன் சீக்ரெட்!
முன்பு கனடாவில் தங்கியபடி ஏராளமான ஆபாசப் படங்களில் நடித்து வந்தவர், இப்போது பாலிவுட் படங்களில் பிஸியாகிவிட்டார். ஜிஸ்ம் 2-க்குப் பிறகு ஏராளமான படவாய்ப்புகள், நல்ல சம்பளம் என்பதால் மும்பையிலேயே கணவருடன் செட்டிலாகிவிட்டார்.
தமிழ் படமான வடகறி யில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியவர், அடுத்து தெலுங்கிலும் நடித்து வருகிறார்.
டேனியல் வெபர் என்பவரை 2011 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் சன்னி லியோன். இன்னும் குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை.
தனது காதல் கணவர் மற்றும் குழந்தைகள் குறித்து சன்னி லியோன் இப்படிக் கூறியுள்ளார்:
நான் எப்போதும் தாய்மை அடைவது குறித்து நினைத்து வருகிறேன். நான் குழந்தைகளை விரும்புகிறேன். குடுமபப் பெண்மணியாக நடந்து கொள்ள ஆசை. ஆனால் ஒரு ஆண்டுக்கு பிறகு எனது உடம்பு இதுபோல் இருக்கும் என சொல்ல முடியாது.
பாலிவுட்டில் இப்போது தான் எனக்கு ஒரு வாழ்க்கை கிடைத்துள்ளது. தற்போது வரும் வாய்ப்புகளை விட்டு விட்டு குழந்தைப் பெற்றுக் கொள்ள முடியாது," என்றார்.
Post a Comment