பொங்கலுக்கு எத்தனை பெரிய படம் வந்தாலும் கவலையில்லை. எவனா இருந்தாலும் வெட்டுவேன் என விஷால் கூறியதாக நடிகர் ஆர்யா தெரிவித்தார்.
ஆம்பள படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற ஆர்யா பேசுகையில், "விஷாலிடம் என்ன மச்சான் படம் எப்போ வெளியாகிறது என்றேன்.
பொங்கலுக்கு என்றார்.
பொங்கலுக்கு என்றால் பெரிய படங்கள் வருமேப்பா என்றேன். அதப்பத்தி எனக்கு கவலையில்ல... எவனா இருந்தாலும் வெட்டுவேன் என்றார். விஷாலின் அந்த நம்பிக்கை எனக்குப் பிடித்தது,'' என்றார்.
'ஆம்பள' இயக்குநர் சுந்தர்.சி பேசும்போது, " இது ஒரு பேமிலி எண்டர்டெய்னர். படமே திருவிழா போன்ற உணர்வு தரும். நான் வேகமாக ஓடுபவன். என்னையே விரட்டி விரட்டி வேலை வாங்கியவர் விஷால்,'' என்றார்.
Post a Comment