நடிகர் சூர்யாவுக்கு படப்பிடிப்பில் காயம் ஏற்பட்டதாக வந்த செய்திகளை மறுத்துள்ள இயக்குநர் வெங்கட் பிரபு, அவர் நலமுடன் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
‘அஞ்சான்' படத்திற்குப் பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மாஸ்' என்ற படத்தில் நடித்து வருகிறார் சூர்யா.
இதில் சூர்யாவிற்கு ஜோடியாக நயன்தாரா, ப்ரணிதா நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, ஆர்.டி.சேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்தப் படத்திலும் சூர்யாவுக்கு இரண்டு கெட்டப்புகள். படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. பொங்கலுக்கு இதன் ட்ரைலரை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.
நேற்று இப்படத்தின் படப்பிடிப்பின்போது சூர்யாவிற்கு காயம் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகின. இது வழக்கம் போல சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவியது.
இதனை மறுத்துள்ள இயக்குநர் வெங்கட் பிரபு, "சூர்யாவுக்கு காயம் ஏற்பட்டதாக வந்தவை வதந்திகளே. அவர் நலமாக உள்ளார். வதந்தி பரப்பும் நண்பர்களே, ஏன் இப்படிச் செய்கிறீர்கள்... நாங்கள் எல்லோரும் சந்தோஷமாக இருக்கிறோம். அனைவருக்கும் ஹாப்பி மாஸ் நியூ இயர்," என்று கூறியுள்ளார்.
Post a Comment