சென்னை: பெரிய திரைக்கு நடிக்க வந்து 3 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள சிவகார்த்திகேயன் நடிகராக தான் இன்னும் வளர வேண்டும் என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
என்ஜினியரிங் படிப்பை முடித்த சிவகார்த்திகேயன் எம்.பி.ஏ. முடித்துவிட்டு சின்னத்திரையில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். சின்னத்திரையில் இருந்த அவர் பாண்டிராஜின் மெரினா படம் மூலம் பெரிய திரைக்கு வந்தார். 2012ம் ஆண்டு பெரிய திரைக்கு வந்த அவர் வந்த வேகத்தில் வளர்ந்தார் என்று தான் கூற வேண்டும்.
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் அவருக்கு பெயர் வாங்கிக் கொடுத்தது. இந்நிலையில் அவர் முதல் முறையாக போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள காக்கிச் சட்டை படம் வரும் 27ம் தேதி ரிலீஸாகிறது.
சிவகார்த்திகேயன் பெரிய திரைக்கு வந்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
சினிமாவில் 3 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளேன். பல சவால்கள் காத்துள்ளன. ஒரு நடிகராக நான் வளர வேண்டும் என்பது எனக்கு தெரியும். உங்களால் தான் நான் இன்று இந்த நிலைக்கு வந்துள்ளேன். அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார்.
Post a Comment