சினிமா என்பது இசை, நடிப்பு, இயல் என பல கலைகளின் ஒன்றான கலவை. சினிமாக்களை பற்றிய சினிமா என்றுமே பலராலும் பெரிதும் வரவேற்கபடுகின்றன. இந்தியாவிற்கே உரித்தான மசாலா படங்களை மையமாக வைத்து ஒளிப்பதிவாளர் லக்ஷ்மன் குமார் இயக்கும் ‘ மசாலா படம்'.
"வெற்றி பெரும் மசாலா படங்கள் எதற்காக வெற்றி பெறுகிறதென்று எவராலும் சுட்டி காட்டுதல் கடினம். அப்படிப்பட்ட மசாலா படங்களை அடிப்படையாக வைத்து ஒரு படம் பண்ணலாம் என்று நானும் தயாரிப்பாளர் விஜய் முடிவு செய்து எடுக்க ஆரம்பித்ததே மசாலா படம்," என ஆரம்பித்தார் லஷ்மன்.
"படத்துல ஒவ்வொரு பிரதான கதாப்பாத்திரமும் மசாலா படங்களில் வரும் காதல், செண்டிமெண்ட் , ஆக்ஷன், காமெடி என ஒரு விஷயத்தைச் சொல்லும். குறும்பும் நகைச்சுவையும் கொப்பளிக்க நடிக்கும் மிர்ச்சி சிவா காமெடிக்கும், சிம்ஹாவின் ஆக்ஷன் பகுதிக்கும், மற்றும் காதல் காட்சிகள் குடும்ப ரசிகர்களை கூட்டி வரும் என நம்புகிறோம்.
"ஜிகர்தண்டா, சூது கவ்வும் போன்ற படங்களை புதுயுக சினிமாக்கள் என்று குறிப்பிடுவார்கள். அத்தகைய சினிமாக்களின் பாணியில் மசாலா கலந்து சொல்லியிருக்கிறோம். படத்தின் தயாரிப்பாளர் முதல் நடித்த நடிகர்கள் வரை அனைவரும் நண்பர்களே. படம் எடுத்ததே ஒரு டூர் போல் இருந்தது," என்றார் லஷ்மன்.
Post a Comment