புதுவை: கம்யூனிஸ்ட்கள் சுத்தத் தங்கம் மாதிரி. சுத்தத் தங்கத்தை வைத்து எப்படி நகை செய்ய முடியாதோ அது மாதிரிதான் அவர்களும் என்றார் இயக்குநர் பாரதிராஜா.
புதுவை மாநில கலை இலக்கிய பெருமன்றம் சார்பில் மக்கள் கலைவிழா புதுவை காந்தி திடலில் நடந்தது.
இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பாரதிராஜா பேசுகையில், "கலை அற்புதமானது.
மக்களுக்கான கலைகளை ஆரம்பித்ததே கம்யூனிஸ்டுகள்தான். மனிதன் வசதி வாய்ப்புகள் வரும் போது தனது சுயத்தை இழக்கிறான். சம்பாதிப்பவனுக்கு மூளை மழுங்குகிறது.
வறுமையில் இருக்கிறவனுக்குதான் வேகம் இருக்கிறது.
இலங்கையில் ஈழத் தமிழர்கள் தாக்கப்படும் போது ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஏன் உள்ளூர் தமிழர்கள் கூட அதனை தட்டிக் கேட்கவில்லை. ஆகையால் தமிழர்களுக்கு எதிர்ப்பு உணர்ச்சி வேண்டும்.
கம்யூனிஸ்டுகள் சுத்த தங்கம் போல் இருக்கக் கூடாது. சுத்த தங்கத்தை வைத்து நகை செய்ய முடியாதே," என்றார்.
Post a Comment