சென்னை: எந்திரன் 2 படத்தின் ப்ரீ ப்ரொடக்க்ஷன் (முன்னோட்ட வேலைகள்) பணிகளை இயக்குநர் ஷங்கர் தொடங்கி விட்டதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
இதனை விமர்சகர் ஸ்ரீதர் பிள்ளை தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்திருக்கிறார். கபாலி படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்தவுடன் ரஜினி எந்திரன் 2 படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருக்கிறார்.
All the best to @shankarshanmugh & @srinivas_mohan 4 kick starting the pre-production work of #Robot2 (#Enthiran2)",
தற்போது எந்திரன் 2 படத்தின் இயக்குநர் ஷங்கர் படத்திற்கான ப்ரீப்ரொடக்க்ஷன் வேலைகளை விஎப்எக்ஸ் பணிகளில் சிறந்தவரான ஸ்ரீநிவாஸ் மோகனுடன் இணைந்து தொடங்கியிருக்கிறார்.
எந்திரன் 2 படத்தில் நடிகை தீபிகா படுகோனா நடிக்கவிருக்கிறார் என்று கூறுகின்றனர் ஆனால் படத்தின் இயக்குனரான ஷங்கர் இந்தத் தகவலை இன்னும் உறுதி செய்யவில்லை.
ரஜினி பிறந்த நாளில் எந்திரன் 2 படத்தின் பூஜை மற்றும் அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கபாலி படம் 2016 ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவிருக்கிறது.
தொடர்ந்து 2017 ம் ஆண்டு பொங்கலுக்கு எந்திரன் 2 படத்தை வெளியிட ஷங்கர் திட்டமிட்டுள்ளார்.
Post a Comment