தாதா சாஹேப் பால்கே விருது பெற்ற இயக்குநர் பாலச்சந்தருக்கு பிரம்ம கான சபை சார்பில் பாராட்டு விழா நடந்தது.
இதில் சினிமா, நாடக, எழுத்துலகைச் சேர்ந்த பலரும் பங்கேற்று அவரைப் பாராட்டினர்.
விழாவில் கலந்து கொண்ட நாடகக் கலைஞர் கிரேஸி மோகன், "பாலச்சந்தர் படைத்த பாத்திரங்கள் காலத்தை வென்றவை. அவரது பாமா விஜயத்துக்கு இணையான ஒரு நகைச்சுவை திரைக்கதையை யாராலும் எழுத முடியாது. ஜெயகாந்தனால் ஞானபீட விருதுக்குப் பெருமை கிடைத்தது. அதுபோல, கேபியால் பால்கே விருதுக்கே பெருமை," என்றார்.
நடிகர் இளவரசு, தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டி, த்ரிசக்தி சுந்தரராமன், தூர்தர்ஷன் முன்னாள் இயக்குநர் ஏ நடராஜன் உள்பட பலரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசினர்.
நிறைவாக கே பாலச்சந்தர் பேசுகையில், "நடிப்பில் வைரங்களாய் ஜொலித்த மேதைகளோடு பணியாற்றியது எனக்கு கிடைத்த பாக்கியம். இன்றைக்கு எனக்கு திரையுலகில் பெரிதாக எந்த ரோலும் இல்லை. என்றாலும் எனக்கு இத்தனை பேர் சேர்ந்து பாராட்டு விழா எடுப்பதை என்னவென்று சொல்வது... இது என் பாக்கியம்," என்றார்.
இதில் சினிமா, நாடக, எழுத்துலகைச் சேர்ந்த பலரும் பங்கேற்று அவரைப் பாராட்டினர்.
விழாவில் கலந்து கொண்ட நாடகக் கலைஞர் கிரேஸி மோகன், "பாலச்சந்தர் படைத்த பாத்திரங்கள் காலத்தை வென்றவை. அவரது பாமா விஜயத்துக்கு இணையான ஒரு நகைச்சுவை திரைக்கதையை யாராலும் எழுத முடியாது. ஜெயகாந்தனால் ஞானபீட விருதுக்குப் பெருமை கிடைத்தது. அதுபோல, கேபியால் பால்கே விருதுக்கே பெருமை," என்றார்.
நடிகர் இளவரசு, தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டி, த்ரிசக்தி சுந்தரராமன், தூர்தர்ஷன் முன்னாள் இயக்குநர் ஏ நடராஜன் உள்பட பலரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசினர்.
நிறைவாக கே பாலச்சந்தர் பேசுகையில், "நடிப்பில் வைரங்களாய் ஜொலித்த மேதைகளோடு பணியாற்றியது எனக்கு கிடைத்த பாக்கியம். இன்றைக்கு எனக்கு திரையுலகில் பெரிதாக எந்த ரோலும் இல்லை. என்றாலும் எனக்கு இத்தனை பேர் சேர்ந்து பாராட்டு விழா எடுப்பதை என்னவென்று சொல்வது... இது என் பாக்கியம்," என்றார்.
Post a Comment