சிலம்பம், களறி கற்கிறார் சரண்யா

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சிலம்பம், களறி கற்கிறார் சரண்யா

7/18/2011 12:31:49 PM

நடிகை சரண்யா நாக், கூறியதாவது: நான் நடித்துள்ள 'மழைக்காலம்' பட ஷூட்டிங் முடிந்துவிட்டது. அடுத்து 'யாத்தீ' என்ற படத்தில் நடிக்கிறேன். இதை யாசிக் இயக்குகிறார். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதை. தெருக்கூத்தாடிகளுக்கும் கிராமத்தில் இருக்கும் சாதாரண பெண்ணுக்கும் ஏற்படும் நிகழ்வுகள், பிரச்னைகள் பற்றிய கதை. முழுக் கதையும் என்னைச் சுற்றி நிகழ்கிறது. இந்தப் படம் என் நடிப்பின் இன்னொரு பரிணாமத்தைக் காட்டும். 'பேராண்மை' படத்துக்காக பாண்டியன் மாஸ்டரிடம் தற்காப்பு கலைகளை கற்றேன். அதை அப்படியே விட்டுவிடாமல் தொடரலாம் என்று முடிவு செய்ததால், இப்போதும், 'சிலம்பம்' கற்று வருகிறேன். இதை முடித்துவிட்டு 'களறி' கற்க இருக்கிறேன். இவற்றை கற்பதன் மூலம், ஆக்ஷன் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தால் நடிப்பேன். 




 

Post a Comment