'சிம்பு படத்தில் நான்தான் ஹீரோயின். ஹன்சிகா நடிப்பதுபற்றி தெரியாது' என்றார் தீக்ஷா சேத். 'ராஜ பாட்டை' படத்தில் அறிமுகமானவர் தீக்ஷா சேத். இவர் கூறியதாவது: ராஜபாட்டையில் விக்ரம் ஜோடியாக நடித்தேன். இது நல்ல அறிமுகமாக அமைந்தது. இப்படத்தில் ஒரு பாடலுக்கு ஸ்ரேயா, ரீமா சென் நடித்திருந்தனர். இது மார்க்கெட் தந்திரம். தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடிக்க குறிப்பிடத்தக்க பாத்திரம் அமைவதற்காக காத்திருக்கிறேன். தற்போது 'வேட்டை மன்னன்' உள்ளிட்ட 2 படங்களில் நடிக்கிறேன். 'வேட்டை மன்னன்' ஷூட்டிங் முதல் ஷெட்யூல் முடிந்தது. மீண்டும் பிப்ரவரியில் 2ம் தேதி ஷெட்யூல் தொடங்குகிறது. நடிப்பு தொழிலில் தாமதம் என்பது ஒரு அங்கமாக இருக்கிறது. பல நேரங்களில் அதை தவிர்க்க முடியவில்லை.
இப்படத்தில் ஹன்சிகாவும் நடிக்கிறாரே என்கிறார்கள். இதன் ஸ்கிரிப்ட் சொல்லும்போது நான்தான் ஹீரோயின் என்று இயக்குனர் கூறினார். சிம்புவின் காதலியாக நடிக்கிறேன். படம் முழுவதும் நான் வராவிட்டாலும் எனக்கு 10க்கும் அதிகமான காட்சிகள் இருக்கிறது. ஆனால் இதற்கு மேல் எனக்கு காட்சிகள் இருக்கும் என்ற நம்புகிறேன். ஹன்சிகா நடிப்பதுபற்றி எனக்கு முதலில் தெரியாது.
இவ்வாறு தீக்ஷா சேத் கூறினார்.
இப்படத்தில் ஹன்சிகாவும் நடிக்கிறாரே என்கிறார்கள். இதன் ஸ்கிரிப்ட் சொல்லும்போது நான்தான் ஹீரோயின் என்று இயக்குனர் கூறினார். சிம்புவின் காதலியாக நடிக்கிறேன். படம் முழுவதும் நான் வராவிட்டாலும் எனக்கு 10க்கும் அதிகமான காட்சிகள் இருக்கிறது. ஆனால் இதற்கு மேல் எனக்கு காட்சிகள் இருக்கும் என்ற நம்புகிறேன். ஹன்சிகா நடிப்பதுபற்றி எனக்கு முதலில் தெரியாது.
இவ்வாறு தீக்ஷா சேத் கூறினார்.
Post a Comment