எருமை மீது ஊர்வலம் போய் கையை உடைத்துக் கொண்ட மன்சூர் அலிகான்!

|


தனது புதிய படம் ஒன்றின் படப்பிடிப்பில் எருமை மீது ஊர்வலம் போன நடிகர் மன்சூர் அலிகான், கீழே விழுந்ததில் அவர் கை முறிந்தது.

நடிகர் மன்சூர் அலிகான், 'லொள்ளு தாதா பராக் பராக்' என்ற புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். வியாசன் என்பவர் இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு போளூர் அருகே ஒரு ஏரி பகுதியில் நடந்தது.

மன்சூர் அலிகான், எருமை மாடு மீது ஊர்வலமாக வருவதுபோல் ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க வந்தவர்களின் கூட்டம் அதிகரிக்க ஆரம்பித்தது. கூட்டத்தைப் பார்த்து எருமை மாடு மிரண்டு ஓடியதால், மன்சூர் அலிகான் கீழே விழுந்தார்.

அதில், அவருடைய வலது கை மணிக்கட்டில் எலும்பு முறிவு ஏற்பட்டது. உடனடியாக போளூர் ஆஸ்பத்திரியில் அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், வேலூர் சி.எம்.சி. ஆஸ்பத்திரிக்கு சென்று அவர் சிகிச்சை பெற்று, கட்டு போட்டுக் கொண்டார். அவரை ஓய்வு எடுக்கும்படி டாக்டர்கள் கூறியிருக்கிறார்கள்.

இதனால், படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. சமீபத்தில்தான் நிலமோசடி வழ்ககில் கைதாகி ஜாமீனில் விடுதலையானார் மன்சூர் அலிகான் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Post a Comment