புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மக்களுக்கு விஜய் நேரில் உதவி

|


கடலூர்: புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மக்களை நேரில் சந்தித்து நிவாரண உதவி வழங்கினார் நடிகர் விஜய்.

தானே புயலால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகள் புதுச்சேரி மற்றும் கடலூர். அரசியல் தலைவர்கள் நேரில் போய் ஆறுதல் கூறினாலும், இந்த மக்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்கள் முழுமையாக சேரவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

இந்த நிலையில் நடிகர் விஜய், தனது ரசிகர் மன்றங்கள் மூலம் முடிந்த வரை உதவிகளைச் செய்து வருகிறார். கடந்த சனிக்கிழமை புதுச்சேரிக்கு சென்ற விஜய் அங்கே பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களுக்கு அரிசி, வீட்டு உபயோகத்துக்கான பாத்திரங்கள், வீடுகளை சீரமைக்க சிமெண்ட் கூரைகள் வழங்கினார்.

மேலும் அதிக அளவு உதவிகளை வழங்க தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் அவர் நேற்று கடலூருக்கு சென்றார். புயலால் கடலூர் மற்றும் சுற்றுப் புற பகுதிகள் சின்னாபின்னமாகிவிட்டன. எனவே இதில் மோசமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கினார் விஜய். இன்னும் அதிக உதவிகளைச் செய்யவிருப்பதாகவும் அவர் மக்களிடம் கூறினார்.

நிவாரண உதவி பெற்றவர்கள் விஜய்யை வாழ்த்திச் சென்றனர்.
 

Post a Comment