தொழிலதிபரை மணக்கிறார் அனன்யா

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
தமிழில் சசிகுமார் ஜோடியாக, 'நாடோடிகள்' படத்தில் அறிமுகமானவர் மலையாள நடிகை அனன்யா. 'சீடன்', 'எங்கேயும் எப்போதும்' படங்களில் நடித்துள்ளார். 'இரவும் பகலும்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இவருக்கும் திருச்சூரை சேர்ந்த ஆஞ்சநேயன் என்ற தொழிலதிபருக்கும் திருமணம் நடைபெற உள்ளது. எர்ணாகுளம் அருகே பெரும்பாவூரில் உள்ள அனன்யாவின் வீட்டில், பிப்ரவரி 2ம் தேதி நிச்சயதார்த்தம் நடக்கிறது. நடிகை அனன்யா கூறும்போது, 'பெற்றோர் பார்த்த மணமகனைத்தான் திருமணம் செய்ய தீர்மானித்திருந்தேன். ஆஞ்சநேயன் குடும்பத்தினர் கடந்த 3 மாதங்களுக்கு முன் பெண் பார்க்க வந்தனர். எங்கள் குடும்பத்துக்கு அவர்களைப் பிடித்திருந்தது. எனவே திருமணத்துக்கு சம்மதித்தோம். திருமணத்துக்குப் பிறகு நடிப்பதா, வேண்டாமா என்பதை ஆஞ்சநேயன் முடிவு செய்வார்'' என்றார்.


 

Post a Comment