ரஜினிக்கு கதை சொன்ன பட குழு

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
தலைவாசல் படத்தை இயக்கியவர் செல்வா. இவர் தற்போது 'நாங்க என்ற படத்தை இயக்குகிறார். இது இவர் இயக்கும் 25 படம். சந்தானபாரதி, பாடகர் மனோ ஆகியோரின் வாரிசுகளுடன் வெவ்வேறு துறையினரின் வாரிசுகள் 10 பேர் இதில் நடிகர்களாக அறிமுகமாகின்றனர். இது பற்றி செல்வா கூறியது: பட குழுவினருடன் சென்று ரஜினியை பார்த்தேன். படத்தின் கதையை கேட்டார். முழு கதையும் சொன்னேன். அதை கேட்டபிறகு படத்தின் கரு பிடித்திருப்பதாக கூறியதுடன் கதைக்களம் 1980யை பின்னணியாக கொண்டிருப்பதால் கதை அம்சம் உள்ள கதையாக இருக்கும் என்று நம்புகிறேன். நிறைய புதுமுகங்கள் திரையுலகுக்கு வரவேண்டும் என்றும் ரஜினி விருப்பம் தெரிவித்தார். அதேபோல் பட குழுவினர் கமல்ஹாசனை சந்தித்து வாழ்த்து பெற்றனர். ÔÔஒரே படத்தில் இவ்வளவு பேர் அதுவும் வாரிசுகள் அறிமுகமாகியுள்ளது பெரிய விஷயம்ÕÕ என்று கமல் பாராட்டினார். ரஜினி - கமல் சந்திப்புக்கு மனோ, சந்தானபாரதி ஏற்பாடு செய்திருந்தனர். அடுத்து பட குழுவினர் அனைவரும் ரோடு ஷோ நடத்த உள்ளனர். சென்னை, கோவை, மதுரை, சேலம் ஆகிய இடங்களில் மார்ச் 2ம் தேதி முதல் ஷூட்டிங் தொடங்குகிறது. பாலமுருகன் ஒளிப்பதிவு. பாலபாரதி இசை.


 

Post a Comment