சிம்பு எழுதி, நடித்த வெற்றிப் படமான மன்மதன் படத்தின் இரண்டாம் பாகம் வருகிறது. இதற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கவிருக்கிறார்.
சிம்பு எழுதி, நடித்த வெற்றிப் படம் மன்மதன். தற்போது மன்மதன் இரண்டாம் பாகம் எடுக்க சிம்பு ரெடியாகிவிட்டார். சிம்பு நடித்த விண்ணைத் தாண்டி வருவாயா படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தார். அந்த படப் பாடல்கள் எல்லாம் சூப்பர் ஹிட்டானது. அதை சிம்பு மறக்கவில்லை. அதனால் தான் மன்மதன் 2 படத்திற்கு இசையமைக்குமாறு ஏ.ஆர்.ரஹ்மானை கேட்டுள்ளார்.
அதற்கு அவரும் சம்மதம் தெரிவித்துவிட்டார் என்று கூறப்படுகிறது. இது குறித்து சிம்பு மறுபடியும் ரஹ்மானை சந்தித்து ஒப்பந்தம் செய்யவிருக்கிறாராம். மன்மதன் போன்றே இந்த படத்தையும் எழுதி, நடிப்பவர் சிம்பு தான். எனக்கு பிடித்த நடிகை ஜோதிகா தான் என்று சொல்லித் திரிந்த சிம்பு அவரையே மன்மதனில் தனக்கு ஜோடியாக்கினார்.
தற்போது எனக்கு பிடித்த நடிகை அனுஷ்கா தான் என்று சிம்பு தெரிவித்துள்ளார். அப்படின்னா மன்மதன் 2வின் நாயகியாக அனுஷ்காவை ஒப்பந்தம் செய்வாரா?
வாலு, போடா போடி, வேட்டை மன்னன் ஆகிய படங்களை முடித்த பிறகு மன்மதன் 2 துவங்கும் என்று தெரிகிறது.
Post a Comment