ஈகா, நான் ஈ என தமிழ் - தெலுங்கில் வெளியாகி ஹிட்டடித்த ராஜமவுலியின் படம் அடுத்து இந்திக்கும் போகிறது.
இந்த முறை 3 டியில் ஈயை உருவாக்கி பாலிவுட்டை மிரட்டத் திட்டமிட்டுள்ளார் ராஜமவுலி.
இந்தியில் அநேகமாக இந்தப் படத்தில் நானி நடித்த பாத்திரத்தில் அபிஷேக் பச்சன் நடிக்கக் கூடும் என்கிறார்கள். அவருக்கு சீக்கிரமே படத்தைப் போட்டுக் காட்டவிருக்கிறார் ராஜமவுலி.
அவர் ஓகே சொல்லிவிட்டால், வில்லனாக சுதீப், ஹீரோயினாக சமந்தா என தன் பழைய டீமை அப்படியே பாலிவுட்டுக்கு கூட்டிப் போகத்திட்டம் உள்ளதாம்.
விஷயத்தைக் கேள்விப்பட்ட, பாலிவுட் நடிகர்கள் ராஜமவுலியைப் பார்க்க நேரம் கேட்டுக் கொண்டிருக்கிறார்களாம்.
Post a Comment