உடல் உறுப்புகளை தானம் செய்த 'ஈ' பட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி

|

S S Rajamouli Pledges Donate Organs

ஒரு படம் வெற்றி பெற்றாலே பந்தா காட்டும் இயக்குநர்கள் வரிசையில் ஒன்பது படம் வரிசையாக வெற்றி பெற்றும் விளம்பரப்படுத்திக் கொள்ளாமல் இருப்பவர் எஸ்.எஸ். ராஜமவுலி. ஈகா ( நான் ஈ ) வெற்றிக்குப் பின்னர் சத்தமில்லாமல் ஒரு காரியம் செய்திருக்கிறார்.ஐதரபாத்தில் உள்ள காந்தி மருத்துவக்கல்லூரிக்கு தனது உடல் உறுப்புகளை தானமாக கொடுத்திருக்கிறார்.

இது குறித்து டிவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ள ராஜமவுலி, என்னுடைய உடல் உறுப்புகள் நான் இறந்த பின்னர் 8 பேருக்கு வாழ்வு அளிக்கும் என்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறியுள்ளார்.

அவரது இந்த செயல் தெலுங்குத் திரையுலகில் இப்போது பெரிய விசயமாக பேசப்படுகிறது.

 

Post a Comment