ஏம்ப்பா, இந்த சீரியலை நைட்ல போடக்கூடாதாப்பா?

|

Bommalattam Begins With Full Glamour

தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் பார்க்கும் படியாக இல்லை என்ற புகார் ஒருபக்கம் இருந்தாலும் இரவு நேரத்தில் ஒளிபரப்ப வேண்டிய சீரியல்களை பகல் நேரத்தில் ஒளிபரப்பி நெளிய வைக்கின்றனர் என்ற குற்றச்சாட்டு இல்லத்தரசிகளிடையே எழுந்துள்ளது.

சன் தொலைக்காட்சியில் காலை 11 மணிக்கு ‘பொம்மலாட்டம்' என்ற புதிய தொடர் இன்று முதல் தொடங்கியுள்ளது. உறவுகள் முடிந்த உடன் அதற்குப் பதிலாக ஒளிபரப்பாகிவரும் இந்த தொடரை சான் மீடியா தயாரித்துள்ளது. டெல்லிகுமார், கிரிஜா, அப்சர், ஸ்ரீ குமார், கணேஷ்கர்,காத்தாடி ராமமூர்த்தி ப்ரீத்தி சஞ்சீவ், வித்யா, கௌரி லட்சுமி ஆகியோர் நடித்துள்ளனர். ஷிவா இயக்கியுள்ள இந்த தொடருக்கு வைரமுத்து பாடல் எழுதியிருக்கிறார், தினா இசையமைத்திருக்கிறார்.

அப்சர் கதாநாயகனாக நடித்துள்ள இந்த தொடரில் ஸ்ரீ குமார் வில்லனாக, அதுவும் பெண் பித்தராக நடித்திருக்கிறார். கிரிஜா கதாநாயகியாக நடித்துள்ள இந்த தொடரில் நீண்ட நாட்களுக்குப் பின்னர் ப்ரீத்தி சஞ்சீவ் நடித்திருக்கிறார். இவரும் வில்லத்தனம்தான் செய்யப் போகிறார் என்று ஊகிக்க முடிகிறது.

குடும்ப கதையாக தொடங்கிய சீரியலில் முதல்நாளே அதிர்ச்சியளிக்கும் வகையில் நெளியக்கூடிய சீன்களை வைத்திருக்கின்றனர்.அதிலும் ஸ்ரீகுமாரின் செயல்பாடுகள், செய்யப்பாடுகள், வசனங்கள், முக பாவனைகள் குடும்பத்தினரை ஓவராக நெளிய வைப்பதாக உள்ளன.

கதைக்கும் காட்சி அமைப்பிற்கும் தேவையான சீன்களைத்தான் வைத்திருக்கிறோம் என்று இயக்குநர் தயாரிப்பில் கூறினாலும் இந்த சீரியலை மிட்நைட்டில்தான் போட்டாக வேண்டும் என்று காளியாத்தா சாமி முன்பு அடித்துக் கூறும் லெவலுக்கு இது உள்ளது.

மெகா தொடர்களை பெரும்பாலும் பெண்கள்தான், குறிப்பாக குடும்பத் தலைவிகள்தான் ரசித்துப் பார்க்கின்றனர். அவர்களை கெடுத்து விடாதீங்கப்பா...

 

Post a Comment