90 நாட்கள்... 15 பிரபலங்கள் என பரபரப்பாக தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவுக்கு வந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் டிவி பிரபலமான ஊர்வசி டோலக்யா வெற்றி பெற்று பல லட்சம் ரூபாய் பரிசை தட்டிச் சென்றுள்ளார்.
இந்தியாவின் மிகப் பிரபலமான ரியாலிட்டி ஷோ பிக்பாஸ். சல்மான் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசனில் சினிமா நட்சத்திரங்கள், மாடல்கள், அரசியல்வாதிகள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட பல பிரபலங்கள் பங்கேற்றனர்.
ஒரே வீட்டிற்குள் உண்டு, உறங்கி, சண்டைபோட்டு, என்னவெல்லாம் செய்து கடைசியில் தாக்குபிடித்து நிற்கவேண்டும். இவர்களின் அனைத்து செயல்களும் காமிரா மூலம் கண்காணிக்கப்படும். எல்லாவற்றையும் தாங்கி வீட்டிற்குள் கடைசிவரை இருப்பவருக்குத்தான் 50 லட்சம் பரிசு கிடைக்கும்.
பிரபலங்களின் கொண்டாட்டம்
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சிக்காக பிரபல ஆர்ட் டைரக்டர் சாபுசிரில் வடிவமைத்த 15000 சதுர அடி வீட்டிற்குள் நவ்ஜோத் சிங் சித்து, சனா கான், டிவி நடிகர் ஆஷ்கா கொராடியா, டிவி நடிகை ஊர்வசி டோலாகியா உள்ளிட்ட 15 நபர்கள் பங்கேற்றனர்.
ஊர்வசி டோலக்கியா வெற்றி
90 நாட்களும் பலகட்டமாக நடந்த நிகழ்ச்சியில் பிரபல மாடலும் டிவி நடிகையுமான ஊர்வசி டோலக்கியா வெற்றி பெற்றுள்ளார். இமான் சித்திக் ரன்னர் அப் பட்டம் வென்றுள்ளார். தென்னிந்திய திரைப்பட நடிகை சனாகான் இரண்டாவது ரன்னர் அப் பட்டம் வென்றுள்ளார்.
அழவைத்த நிகழ்ச்சி
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது பற்றி கூறியுள்ள சனாகான், என்னை அழவைத்த நிகழ்ச்சி இது. அதை தாக்குப்பிடித்து நின்றதாலேயே வெற்றி பெற முடிந்ததாக கூறினார். யார் யாரோ நாரதர் வேலை செய்ய நினைத்தும் என்னிடம் அது நடக்கவில்லை என்றார். நம்மை யார் எப்படி அணுகுகின்றனர். கெட்ட எண்ணமா? நல்ல எண்ணமா? என்பதை அனுபவப்பூர்வமாக தெரிந்து கொள்ளவைத்த நிகழ்ச்சி இது என்கிறார் சனாகான்.
பிரபுதேவா நடனம்
பிக்பாஸ் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்த பரிசினை சல்மான்கான் நேரடியாக வழங்க உள்ளார். இதில் பிரபுதேவா, ரெமோ டிசோசா நடனமாட இருக்கின்றனர். யனாகுப்தாவின் கலக்கல் நடனமும் இடம்பெறப்போகிறதாம்.
Post a Comment