சென்னை: சினேகா, பிரசன்னா ஜோடி நேற்று தலைப் பொங்கலை கொண்டாடியது.
சினேகா தனது காதலர் பிரசன்னாவை கடந்த ஆண்டு மே மாதம் மணந்தார். இந்த பொங்கல் அவர்களுக்கு தலைப் பொங்கலாகும். தலைப் பொங்கலை சினேகா தனது மாமியார் வீட்டில் கணவர், உறவினர்களுடன் சேர்ந்து பொங்கலிட்டு கொண்டாடினார்.
இது குறித்து சினேகா கூறுகையில்,
தலைப் பொங்கலை மகிழ்ச்சியாக கொண்டாடினேன். பொங்கலுக்காக பிரசன்னா எனக்கு 9 முழம் பட்டுச்சேலையை வாங்கிக் கொடுத்தார். திருமணத்திற்கு பிறகு ஓரிரு நிகழ்ச்சிகளில் தான் பட்டுப்புடவை உடுத்தியுள்ளேன். பொங்கல் பண்டிகை குடும்ப பண்டிகை. இது போன்ற பண்டிகைகளால் குடும்பத்தார் ஒன்று சேர்கின்றனர். மேலும் குடும்ப உறவுகளும் வலுப்படுகிறது என்றார்.
பிரசன்னா கூறுகையில்,
பள்ளிப் பருவத்தில் கிராமத்தில் பொங்கல் கொண்டாடியது மகிழ்ச்சி அளித்தது. தற்போது சினேகா என்னுடன் இருப்பதால் இது எனக்கு விசேஷமான பண்டிகை என்றார்.
Post a Comment