சென்னை: தன்னுடைய சமர் படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்யவிடாமல் ஸ்டுடியோ கிரீன் தடுத்ததாக இயக்குனர் திரு ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
திரு இயக்கத்தில் விஷால், த்ரிஷா நடித்துள்ள சமர் பொங்கலுக்கு ரிலீஸாகி ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் சமர் படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய விடாமல் ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் பிரச்சனை செய்ததாக திரு ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
அன்புள்ள எகோ பிரண்ட்லி ஸ்டுடியோ... எங்கள் பட ரிலீஸை தடுத்து நிறுத்த நீங்கள் உங்களால் முடிந்ததை செய்தீர்கள் என்று எனக்கு தெரியும். ஆனால் உங்கள் முயற்சி தோற்றது. அடுத்த முறையாவது உங்கள் முயற்சி வெற்ற பெறட்டும். பிற படங்களில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு உங்கள் படத்தைப் பற்றி மட்டும் யோசியுங்கள். உங்களின் அடுத்த படத்திற்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.
அவர் எகோ பிரண்ட்லி ஸ்டுடியோ என்று கூறியிருப்பது ஸ்டுடியோ கிரீனைத் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment