மணிரத்னம் இயக்கத்தில் வெளியான கடல் படம் தமிழில் படு தோல்வியைச் சந்தித்துள்ளது. அந்தப் படத்தில் ரூ 17 கோடி நஷ்டம் என்று கூறி, மன்னன் பிலிம்ஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளது.
இந்தப் புகாரால், மிரண்டு போன மணிரத்னம் தன் வீட்டுக்கு போலீஸ் காவலை பலப்படுத்துமாறு கோரியுள்ளார்.
இந்த நிலையில் தெலுங்கில் கடலி என்ற பெயரில் வெளியான இதே படம் வசூலைக் குவித்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்தப் படம் 27 நாட்களில் 98 கோடியை வசூலித்துள்ளதாக தெலுங்கு இணையதளங்களில் இன்று செய்திகள் வெளியாகியுள்ளன.
இது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. காரணம் தெலுங்கின் சூப்பர் டூப்பர் ஹிட் படங்களான நான் ஈ ரூ 120 கோடியும், மகதீரா ரூ 90 கோடியும் குவித்துள்ளன. இந்த சாதனையை இதுவரை வேறு படங்கள் முறியடிக்கவில்லை என்பதுதான் தெலுங்கு பாக்ஸ் ஆபீஸ் நிலவரம்.
தமிழிலிருந்து தெலுங்குக்கு டப் செய்யப்பட்ட படமான ரோபோ ரூ 71 கோடியை ஈட்டியது டப்பிங் படங்களில் பெரிய சாதனையாகப் பார்க்கப்படுகிறது.
ஆனால் இவை எல்லாமே வெளியாகி கிட்டத்தட்ட 100 நாட்களில் நிகழ்ந்த வசூல் சாதனை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் கடலி என்ற பெயரில் வெளியான ஒரு டப்பிங் படம் 27 நாட்களில் 98 கோடியை வசூலித்துவிட்டதாக செய்தி வெளியிட்டிருக்கின்றன சில இணையதளங்கள். கடலி தெலுங்கில் படு தோல்வியைத் தழுவியதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பிறகு இந்த காமெடி அரங்கேறியிருப்பது கவனிக்கத்தக்கது.
பாத்துப்பா.. இப்படிப்பட்ட அதிர்ச்சியையெல்லாம் மணிரத்னம் தாங்கமாட்டார் என கமெண்ட் அடிக்கிறார்கள் விஷயமறிந்தவர்கள்!
Post a Comment