நடிகை லட்சுமி ராயைப் பற்றி இனி எதுவும் எழுதக் கூடாது என்று குமுதம் வாரப் பத்திரிகைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழின் முன்னணி நடிகையான லட்சுமி ராய் சொன்னதாகக் கூறி, குமுதம் ஒரு பேட்டியை வெளியிட்டிருந்தது. அதில் ஒரே அறையில் ஹீரோவுடன் ஹீரோயின் தங்கினால் தவறில்லை என்று லட்சுமி ராய் சொன்னதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனை ஆட்சேபித்த லட்சுமி ராய், தான் சொல்லாத ஒன்றை குமுதம் தவறாக வெளிட்டிருந்ததாக குற்றம்சாட்டினார்.
இதற்காக அந்தப் பத்திரிகை மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், இனி தன்னைப் பற்றி அந்தப் பத்திரிகை எதுவும் எழுதக் கூடாது என்று கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி, "குமுதம் பத்திரிகை லடசுமி ராயைப் பற்றிய செய்திகளை வெளியிட இடைக்காலத் தடை விதிப்பதாக" தீர்ப்பு வழங்கினார்.
Post a Comment