அரட்டையோடு இசையும், இலக்கியமும் பேசும் மக்கள் டிவி

|

Makkal Tv Kathai Paesi Gaanam Paadi

மக்கள் டிவியில் கதை பேசி கானம் பாடி நிகழ்ச்சியில் அன்றாட நிகழ்வுகளை அரட்டையோடு அலசுகின்றனர் மூன்று பேர்.

பேராசிரியர் ராம.கவுசல்யா தலைமையில் இளம்இசைக்கலைஞர்கள் மதுவந்தி, ஐஸ்வர்யா ஆகியோர் கலந்துரையாடும் இந்த நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மதியம் 12.30 மணிக்கு மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.

மூன்று பெண்கள் சேர்ந்தாலே என்ன பேசுவார்கள். இந்த நிகழ்ச்சியில் அன்றாடம் வீட்டில் நடக்கும் நிகழ்வுகள் வரை, சமையல், அறிவியல்,இசை, இலக்கியம் என அனைத்தையும் அள்ளித்தருகிறது.

அந்த வகையில் இந்த வாரம் சைவ பிரபந்த திரட்டு எனப்படும் பதினோராம் திருமுறையில் பன்னிருவர் பாடிய தொகுப்பு குறித்து பேசப்படுகிறது. சொற்சுவை, பொருட்சுவை மாறாமல் நயம்பட கலந்துரையாடுகின்றனர்.

 

Post a Comment