திலீப் - மஞ்சு வாரியர் விவாகரத்து வதந்தியால் திருச்சூரில் பரபரப்பு!

|

Dileep Manju Heading Divorce

திருச்சூர்: முன்னணி மலையாள நடிகர் திலீப் - நடிகை மஞ்சுவாரியார் விவாகரத்து செய்ய நீதிமன்றத்துக்கு வரப் போவதாக வதந்தி பரவியதால் திருச்சூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நீதிமன்றத்தில் பெரும் கூட்டம் குவிந்தது.

முன்னணி நடிகையாக இருந்த மஞ்சு வாரியர் 1998-ல் திலீப்பை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு மஞ்சு வாரியர் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டார்.

இந்த நிலையில் திலீப்புக்கும், சமீபத்தில் விவாகரத்தான காவியா மாதவனுக்கும் தொடர்பு இருப்பதாக மீடியாவிலவ் பரபரப்பான செய்திகள் வெளியாக ஆரம்பித்தன.

இதனால் திலீப் - மஞ்சுவாரியர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அடிக்கடி சண்டை போட்டுக்கொண்டனர். தற்போது மஞ்சுவாரியர் கணவரை பிரிந்து தனியாக வசிக்கிறார். திலீப் பெரும்பாலும் காவ்யா மாதவனுடன் இருப்பதாகக் கூறப்படுகிறது.

திலீப்பும் - மஞ்சு வாரியரும் விவாகரத்து செய்து கொள்ள முடிவெடுத்து இருப்பதாக கூறப்பட்டது.

இருவரும் திருச்சூர் குடும்ப நல நீதிமன்றத்தில் ஒன்றாக ஆஜராகி விவாகரத்து மனுதாக்கல் செய்யப் போவதாக நேற்று செய்தி பரவியது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இருவரும் நீதிமன்றத்துக்கு வந்து கொண்டிருப்பதாகக் கூறப்பட்டதால், அவர்களை்ப பார்க்க பெரும் கூட்டம் கூடியது. அவர்களைச் சமாளிக்க போலீஸ் குவிக்கப்பட்டது. ஆனால் திலீப் - மஞ்சு நீதிமன்றத்துக்கு வரவே இல்லை!

 

Post a Comment