சென்னை: கண்ணா லட்டு தின்ன ஆசையா இயக்குனர் மணிகண்டன் சந்தானம், மிர்ச்சி சிவாவை வைத்து தினசரி 4 காட்சிகள் என்ற படத்தை எடுக்கிறார்.
கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் மூலம் கோலிவுட்டுக்கு கிடைத்த இயக்குனர் மணிகண்டன். மனிதர் காமெடியில் பின்னி பெடலெடுத்திருந்தார். சந்தானம் பவரை கலாய்க்கும் காட்சிகள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் மணிகண்டன் அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார்.
மிர்ச்சி சிவா, சந்தானம் மற்றும் பல நகைச்சுவை நடிகர்களை வைத்து அவர் தினசரி 4 காட்சிகள் படத்தை எடுக்கிறார். படத்தை தேனப்பன் தயாரிக்கிறார். ஏற்கனவே சிவா, சந்தானம் கூட்டணி கலகலப்பில் கலக்கியது. அந்த கூட்டணி தில்லு முல்லுவிலும் வெற்றி பெற்றுள்ளது. தில்லு முல்லு படத்தில் சந்தானத்தின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த கூட்டணி மீண்டும் சேர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment