தமிழின் முன்னணி நடிகர் தனுஷ் முதல் முறையாக நடித்த இந்திப் படம் ராஞ்ஜ்ஹனா. ஆனந்த் எல் ராய் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். சோனம் கபூர் ஜோடியாக நடித்துள்ளார்.
இந்தப் படத்தை தமிழில் அம்பிகாபதி என்ற பெயரில் டப் செய்துள்ளனர்.
வரும் ஜூன் 21-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது ராஞ்ஜ்ஹனா. இந்தியிலும் தமிழிலும் ஒரே நேரத்தில் இந்தப் படத்தை வெளியிடத் திட்டமிட்டிருந்தனர்.
ஆனால் அந்தத் தேதியில்தான் தனுஷ் நடித்த நேரடி தமிழ்ப் படமான மரியான வெளியாகிறது.
தமிழில் தனுஷ், ரஹ்மானுக்கு பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. ஒரே நேரத்தில் ராஞ்ஜ்ஹனா, அம்பிகாபதி, மரியான் என மூன்றையும் வெளியிடுவது சரியாக இருக்காது என்பதால், அம்பிகாபதியை நிறுத்தி வைக்க அதன் வெளியீட்டாளரான ஈராஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
ஜூன் 21-ம் தேதி ராஞ்ஜ்ஹனாவும் மரியானும் மட்டும் வெளியாகும். அம்பிகாபதி வேறொரு நாளில் வெளியாகும்.
தனுஷின் '3' படத்தின் இந்திப் பதிப்பை இப்படித்தான் தள்ளிப்போட்டனர். ஆனால் அது இன்றுவரை வெளியானபாடில்லை, இந்தியில். இதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்!
Post a Comment