எனக்கும் ஆர்யாவுக்கும் காதல் என்று வரும் கிசுகிசுக்கள் நிஜமல்ல, எங்களுக்கிடையில் அப்படி எந்த நெருக்கமும் இல்லை என்று நயன்தாரா தெரிவித்துள்ளார்.
பாஸ் என்கிற பாஸ்கரனில் இருவரும் ஜோடியாக நடித்ததிலிருந்து நயன்தாராவும், ஆர்யாவும் காதலிப்பதாக தொடர்ந்து கிசுகிசுக்கள் வந்தவண்ணம் உள்ளன.
தற்போது ராஜா ராணி படத்திலும் இணைந்து நடிக்கின்றனர். நயன்தாராவும் ஆரியாவும் தொடர்ந்து தனிமையில் சந்தித்து வருவதாக செய்திகள் வந்தன.
சமீபத்தில் ராஜா ராணி பட விழாவுக்காக தயாரான அழைப்பிதழில் நயன்தாராவும், ஆர்யாவும் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொள்வது போன்ற படத்தையும் அச்சிட்டு பரபரப்பு ஏற்படுத்தினர். இதனால் இருவரும் நிஜத்திலும் இணைவார்கள் என்று கூறப்பட்டது.
இதுகுறித்து நயன்தாரா கூறுகையில், "ஆர்யாவையும், என்னையும் இணைத்து வதந்திகள் பரவுகின்றன. சினிமாவில் இதெல்லாம் சகஜம்தான். ஆனால் உண்மையில் எங்களுக்குள் எதுவும் கிடையாது. நாங்கள் இரண்டு படங்களில் சேர்ந்து நடிக்கிறோம். அதனால் தான் இப்படி வதந்தி பரவியுள்ளது.
இருவரும் சேர்ந்து நடிப்பது தானாக நடந்தது. விரும்பி நடக்கவில்லை. காதல் போன்ற விஷயங்களிலிருந்து வெளியே வந்து விட்டேன். இப்போது தனியாகத்தான் இருக்கிறேன். சில காலம் இதே நிலையில் இருக்க விரும்புகிறேன்.
ஆண்-பெண் பழகினால் காதலாகத்தான் இருக்க வேண்டுமா? நண்பர்களாக இருக்க கூடாதா? நடிகரும், நடிகையும் ஒருத்தருக்கு ஒருத்தர் டேட்டிங் இல்லாமல் நண்பர்களாக வாழ முடியும். நானும் ஆர்யாவும் சாதாரண நண்பர்களாகத்தான் இருக்கிறோம். அவர் வீட்டில் நடந்த விருந்து பற்றி பேசுகிறார்கள். அங்கு நான் மட்டுமே போகவில்லை. என்னைப் போல் நிறைய சினிமாக்காரர்கள் வந்து இருந்தார்கள். அவர்களை மறந்துவிட்டார்களே.
சில காலம் தனிமையில் இருப்பதே என் முடிவு. காதல் பற்றி சிந்திக்க விரும்பவில்லை. ஆர்யா எனக்கு நல்ல நண்பர். எப்போதும் அப்படியே இருப்பார்.
ராஜா ராணி பட அழைப்பிதழில் திருமணம் செய்து கொள்வது போன்று எங்கள் படங்களை அச்சிடப்பட்டு இருந்தது படத்தின் விளம்பரத்துக்காகத்தான்," என்றார்.
Post a Comment