மும்பை: மும்பை குண்டு வெடிப்பில் கைதாகி சிறையில் உள்ள ஹிந்தி நடிகர் சஞ்சய் தத், தனது ஓய்வு நேரங்களில் சிறை அலுவலகப் பணிகளைச் செய்கிறாராம்.
பிரபல ஹிந்தி நடிகரான சஞ்சய் தத், மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் தற்போது எரவாடாச் சிறையில் உள்ளார். அங்கு அவருக்கு பேப்பர் பை செய்யும் தொழில் செய்யும் பணி வழங்கப்பட்டுள்ளது.
ஆனாலும், தனது வேலை நேரம் போக மீதி நேரங்களில் ஓய்வெடுக்காமல், சுறுசுறுப்பாக சிறை அலுவலர்களுக்கு உதவி செய்கிறாராம் சஞ்சய். நல்ல கல்வியறிவு பெற்றவராக இருப்பதால், அலுவலகப் பணிகளைத் திரம்பட செய்து முடிக்கிறாராம்.
அலுவகப் பணிகள் முடிவடைந்த பிறகு கிடைக்கும் நேரத்தில் தனது காதல் மனைவி மானயாதத்திற்கு கடிதம் எழுத அமர்ந்து விடுகிறாராம் சஞ்சய் தத்.
Post a Comment