சென்னை: நடிகை சங்கீதாவின் வீட்டில் புகைச்சலாக கிடக்கிறதாம்.
ரசிகாவாக கோலிவுட்டில் அறிமுகமானவர் பின்னர் தனது பெயரை சங்கீதா என்று மாற்றிக் கொண்டார். பிதாமகன் படத்தில் தில்லாக நடித்திருந்தார். அதன் பிறகு சில படங்களில் நடித்த அவரால் பெரிதாக ஜொலிக்க முடியவில்லை. இந்நிலையில் அவர் பாடகரான க்ரிஷை மணந்தார். பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி அவர்கள் திருமணம் நடந்தது.
திருமணம் முடிந்த பிறகு அமைதியாகச் சென்ற அவர்கள் வாழ்க்கையில் புதுவரவாக ஒரு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் க்ரிஷ் சில பெண்களுடன் நெருக்கமாக உள்ளாராம். இதனால் வீட்டில் புகைச்சலாக இருக்கிறதாம்.
வீட்டில் நடக்கும் விஷயங்களை மறக்கவே சங்கீதா சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறாராம்.
Post a Comment