கவுதம் கார்த்தி - ப்ரியா ஆனந்த் நடிக்க ஐஸ்வர்யா இயக்கும் வை ராஜா வை படத்தின் ஷூட்டிங் நேற்று தொடங்கியது.
மணிரத்னம் இயக்கிய 'கடல்' படத்தில் நாயகனாக அறிமுகமானவர் கவுதம். இவர் நடிகர் கார்த்திக் மகன்.
தனது 2-வது படமாக கவுதம் கார்த்திக் 3 திரைப்படத்தை இயக்கிய ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் வை ராஜா வை படத்தில் நடிக்கிறார்.
ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மென்ட் தயாரிக்க, ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் ‘வை ராஜா வை' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நேற்று தொடங்கியது. இயக்குநர்கள் பாலா, வெற்றிமாறன், ‘எங்கேயும் எப்போதும்' சரவணன் மற்றும் படத்தின் தயாரிப்பாளர் கல்பாத்தி எஸ்.அகோரம் ஆகியோர் கலந்துகொண்டு படப்பிடிப்பை தொடங்கி வைத்தார்கள்.
கதாநாயகன் கவுதம் கார்த்திக், கதாநாயகி ப்ரியா ஆனந்த், விவேக், இயக்குநர் எஸ்.எம்.வசந்த், ஸ்ரீரஞ்சனி ஆகியோர் பங்கேற்ற காட்சிகள் படமாக்கப்பட்டன. இவர்களுடன் ஜெய், பூர்ணிமா உள்பட பலர் நடிக்கிறார்கள்.
வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்தார். யுவன்சங்கர்ராஜா இசையமைக்கிறார்.
சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
Post a Comment