சென்னை: சிம்புவின் தங்கை இலக்கியாவுக்கு வரும் பிப்ரவரி மாதம் 10ம் தேதி திருமணம் நடக்கவிருக்கிறது.
சிம்புவின் தங்கை இலக்கியாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அவரது திருமணம் வரும் பிப்ரவரி மாதம் 10ம் தேதி வெகு விமரிசையாக நடக்கவிருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை டி. ராஜேந்தரும், அவரது மனைவி உஷாவும் மும்முரமாக செய்து வருகின்றனர். டி.ராஜேந்தர் குடும்பத்துடன் பழனி முருகன் கோவிலுக்கு சென்றுள்ளார்.
இதனால் அவர் மகளின் திருமணம் குறித்து நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடுகிறார்.
சிம்புவிடம் உங்களுக்கு திருமணம் எப்பொழுது என்று கேட்டால் முதலில் தங்கச்சிக்கு முடியட்டும் என்று கூறி வந்தார். இந்நிலையில் இலக்கியாவுக்கு திருமணம் நடக்கவிருக்கிறது.
அப்படி என்றால் விரைவில் சிம்புவின் திருமண அறிவிப்பை எதிர்பார்க்கலாமா?
Post a Comment