சென்னை: சீயான் நடிகர் கேட்ட சம்பளத் தொகையை கேட்டு சோடா பட இயக்குனர் அதிர்ச்சி அடைந்தாராம்.
சீயான் நடிகர் பிரமாண்ட இயக்குனரின் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்திற்காக அவர் ரூ.8 கோடியை சம்பளமாக வாங்கியுள்ளாராம். இந்நிலையில் அவர் தனது சம்பளத்தை ரூ.15 கோடியாக உயர்த்த முடிவு செய்துள்ளாராம். அவர் கேட்கும் சம்பளத்தை கொடுக்க இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் தயாராக இல்லையாம்.
இந்நிலையில் தான் சோடா பட இயக்குனர் நடிகரை பார்த்து கதை சொன்னாராம். கதை நடிகருக்கு மிகவும் பிடித்துவிட்டதாம். இதையடுத்து தனது புதிய சம்பளத்தை இயக்குனரிடம் தெரிவித்து நல்ல தயாரிப்பாளருடன் வாருங்கள் என்றாராம் நடிகர்.
சரி என்று கூறி விட்டு வந்த இயக்குனர் அவர் கேட்கிற சம்பளத்தை வைத்து நான் மூன்று படங்களை எடுத்துவிடுவேனே என்று தனது நண்பர்களிடம் தெரிவித்து வருகிறாராம்.
Post a Comment