சென்னை: வடிவேலு நடித்த தெனாலிராமன் படத்துக்கு இன்றுமுதல் கட்டணச்சீட்டு முன்பதிவு ஆரம்பமாகியுள்ளது.
மூன்றாண்டுகளுக்குப் பிறகு வெளியாகும் வடிவேலு படம் என்பதால் இந்தப் படத்துக்கு பெரிய எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது. சென்னையில் 30-க்கும் மேற்பட்ட அரங்குகளில் தெனாலிராமன் படம் வெளியாகிறது.
தமிழகமெங்கும் 300-க்கும் அதிகமான அரங்குகளில் படத்தை வெளியிட முயற்சிகள் நடக்கின்றன.
நாளை மறுநாள் வெளியாகும் இந்தப் படத்துக்கான கட்டணச்சீட்டு முன்பதிவு இன்று முதல் ஆரம்பமாகிறது. நிறைய ரசிகர்கள் ஆவலுடன் இந்தப் படத்துக்கு முன்பதிவு செய்ய வந்ததாக திரையரங்க நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக மல்டிப்ளெக்ஸ் அரங்குகளில் முன்பதிவு நன்றாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்தப் படம் குறித்து வடிவேலு கூறுகையில், "என் படத்துக்கு குடும்பம் குடும்பமாக மக்கள் வருவார்கள். காரணம், எந்த ஒரு சிறு அருவருப்பான விஷயமும் இல்லாத, நல்ல படம் இந்த தெனாலிராமன். எல்லோரும் குடும்பத்தோடு சிரித்து மகிழ ஒரு வாய்ப்பாக இந்தப் படம் அமையும்," என்று கூறியுள்ளார்.
Post a Comment