அரையாண்டில் செஞ்சுரி அடிக்கும் தமிழ் சினிமா!

|

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தமிழில் வெளியான சினிமாக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்த மே 30-ம் தேதிக்குள் தமிழில் வெளியான, வெளியாகும் படங்களின் எண்ணிக்கை 80. ஜூன் மாத இறுதிக்குள் இது 100-ஐத் தொடவிருக்கிறது.

கோடம்பாக்கத்தில் இது புதிய சாதனை என்றுதான் சொல்ல வேண்டும்.

அரையாண்டில் செஞ்சுரி அடிக்கும் தமிழ் சினிமா!

இன்றைய தேதிக்கு சினிமா நன்றாக ஒடுகிறதோ இல்லையோ.. படமெடுக்க வரும் தயாரிப்பாளர்கள் எண்ணிக்கை தாறு மாறாக உயர்ந்து வருகிறது. லாபம் கிடைக்காவிட்டாலும், சினிமாவுக்கே உரிய கவர்ச்சி, பலரையும் தயாரிப்பாளராக்குகிறது.

அப்படி படம் தயாரிக்க வந்துள்ள திடீர் தயாரிப்பாளர்களால் இன்று 350 படங்கள் தயாரிப்பில் உள்ளன.

வாரத்துக்கு குறைந்தது நான்கு அல்லது ஐந்து படங்களாவது வெளியாகின்றன. கோச்சடையான் மாதிரி பெரிய படம் வரும்போது மட்டும் வாரத்துக்கு ஒன்றாக மாறிவிடுகிறது இந்த எண்ணிக்கை.

வரும் மே 30ம் தேதி, அதாவது நாளை மட்டுமே 5 புதிய படங்கள் வெளியாகவிருக்கின்றன.

தவிர ஜூன் மாதம் மட்டும் 15 முதல் 18 புதிய படங்கள் ரிலீசுக்குக் காத்திருக்கின்றன.

ஆக அரையாண்டுக்குள் செஞ்சுரி அடித்து சாதனைப் படைக்கவிருக்கிறது தமிழ் சினிமா.

இவற்றில் எத்தனை வெற்றிப் படங்கள் என்று மட்டும் கேட்டுடாதீங்க!

 

Post a Comment