சிக்கலில் பெரிய தயாரிப்பு நிறுவனம்... 80 சி இருந்தாத்தான் அடுத்த படத்தை ரிலீஸ் பண்ண முடியுமாம்!

|

ஒரே நேரத்தில் பல படங்களைத் தயாரிக்கும் போக்கை தமிழ் சினிமாவுக்கு கொண்டு வந்த தயாரிப்பாளர் அவர். விருதின் பெயரில் அமைந்த அவரது பட நிறுவனம் இன்றைக்கும் 4 படங்களைத் தயாரித்துக் கொண்டுதான் இருக்கிறது.

பிரமாண்ட இயக்குநரின் படம், உலக நடிகர் படம் என கெத்துக்கு குறைவில்லை.

ஆனால் எந்தப் படத்தையும் வெளியிட முடியாத சூழல். காரணம் நிதிச் சிக்கல்தான்.

மே மாதமே வரவேண்டிய பிரமாண்ட படம், இன்னும் இரண்டு மாதங்களிலாவது வருமா என்றால், உதட்டைப் பிதுக்குகிறார்கள்.

போன ஜனவரிக்கே வந்துவிடும் என அறிவிக்கப்பட்ட உலக நடிகர் படமோ, வரும் ஜனவரியிலாவது வருமா என்று கேட்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

மற்ற சின்னப் படங்களையாவது வெளியிடலாம் என்றால், உலக நடிகர் படத்துக்காக அட்வான்ஸ் கொடுத்த தியேட்டர்காரர்கள் வழிமறித்து நிற்கிறார்களாம்.

பேரு பெத்த பேரு, தாக நீலு லேது-ன்னு ஊர்ப்பக்கம் தமிழ் - தெலுங்கில் ஒரு வழக்குச் சொல்லிருக்கிறது. அப்படியாகிவிட்டதே நிலைமை!

 

+ comments + 1 comments

Anonymous
21 June 2014 at 23:44

Stupid money management by Oscar film ravichandran

Post a Comment