மும்பை: லண்டனில் வசிக்கும் இந்திய குடும்பத்தாரின் மஹாலை திறந்து வைக்க பாலிவுட் நடிகர் சல்மான் கான் ரூ.3.5 கோடி கேட்டதாகக் கூறப்படுகிறது.
நடிகர் சல்மான் கானுக்கு இந்தியா தவிர வெளிநாடுகளிலும் ரசிகர்கள் அதிகம். அதிலும் இங்கிலாந்தில் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் லண்டனில் வசிக்கும் இந்திய குடும்பம் ஒன்று அங்கு மஹால் ஒன்றை கட்டியுள்ளது. அந்த மஹாலை சல்மான் கான் திறந்து வைத்தால் நன்றாக இருக்கும் என்று அவர்கள் நினைத்தனர்.
இரண்டு நாட்கள் நடக்கும் திறப்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு அவர்கள் சல்மானிடம் கேட்க அவரும் சரி என்று கூறியுள்ளார். ஆனால் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மஹாலை திறந்து வைக்க சல்மான் ரூ.3 கோடி கேட்டாராம். மேலும் தனது ஊழியர்கள் லண்டன் வரும் செலவு மற்றும் அவர்கள் தங்கும் செலவுக்காக ரூ.50 லட்சம் அளிக்குமாறும் அவர் கேட்டாராம்.
இது குறித்து அறிந்த பத்திரிக்கையாளர்கள் உடனே சல்மானை அணுகியுள்ளனர். ஆனால் அவரது செய்தித் தொடர்பாளரோ இந்த செய்தி முற்றிலும் தவறு என்று தெரிவித்துள்ளார்.
Post a Comment