'சாமானியருடன் ஒரு நாள்'!

|

சாமானியருடன் ஒரு நாள்... தலைப்பே சொல்லும் நிகழ்ச்சி எதைப் பற்றியதென்று.

இந்த நிகழ்ச்சி புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக் கிழமையன்று பகல் 12.30 மணி முதல் 1.00 மணி வரை ஒளிபரப்பாகிறது.

'சாமானியருடன் ஒரு நாள்'!

திரை நட்சத்திரங்களையும் அரசியல் பிரபலங்களையும் அறிந்துக் கொள்வதில் காட்டும் ஆர்வத்தை, அண்டை வீட்டுக்காரரை அறிந்து கொள்வதில் காட்டுவதில்லை மக்கள்.

அடுத்த வீட்டுக்காரருக்கே இந்த நிலையென்றால், சாலையில் நம்மைக் கடந்து போகும் சாதரண மனிதர்களின் வாழ்க்கை குறித்து நமக்கு என்ன தெரிந்துவிடும்?

சலவைத் தொழிலாளி, பழைய துணி விற்பவர், டீ விற்பவர், மரம் ஏறும் தொழிலாளி என எத்தனையோ சாமானியர்களை சாலைகளில் கடந்து செல்கிறோம்.

'சாமானியருடன் ஒரு நாள்'!

அவர்களின் உழைப்பைப் பயன்படுத்திக் கொள்ளும் நாம், அவர்களுடைய அன்றாட வாழ்க்கை குறித்து சிந்திப்பதில்லை. இந்த சாமானிய மனிதர்களின் கஷ்டங்கள், நஷ்டங்கள், இஷ்டங்கள் நாம் அறியாதது, தெரியாதது.

அதை மக்களுக்கு எடுத்துக்காட்டும் வகையில் இந்த ‘சாமானியருடன் ஒரு நாள்' நிகழ்ச்சி அமைக்கப்பட்டுள்ளது.

 

Post a Comment