சென்னை: கத்தி பட இசை ஆல்பத்தில் விஜய் ரசிகர்களுக்கு ஏராளாமான ஆச்சரியங்கள் காத்திருப்பதாக இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்துள்ளார்.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடித்து வரும் கத்தி படத்திற்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. படம் பிரச்சனையை எல்லாம் தாண்டி தீபாவளிக்கு ரிலீஸாகுமா என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.
படத்தில் விஜய் தனது சொந்த குரலில் டூயட் பாடுகிறார். இந்நிலையில் இது குறித்து படத்தின் இசையமைப்பாளர் அனிருத் ட்விட்டரில் கூறுகையில்,
#Kaththialbum update.. pic.twitter.com/UnseF9Teat
— Anirudh Ravichander (@anirudhofficial) August 17, 2014 கத்தி இசை வேலை கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. அதில் ரசிகர்களுக்கு ஏகப்பட்ட ஆச்சர்யங்கள் காத்துள்ளன. விஜய் சார் பாடும் பாடல் தயாராகிவிட்டது. விரைவில் அவரை பாட வைத்து அதை பதிவு செய்வேன். படத்தின் இசையை செப்டம்பர் மாதம் மத்தியில் வெளியிட திட்டமிட்டுள்ளோம். விரைவில் தேதியை அறிவிப்போம். கத்தி இசையை உங்களுடன் பகிர்ந்துகொள்ள நாங்கள் அனைவரும் ஆவலாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
கத்தி படத்தின் தயாரிப்பாளர் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு நெருக்கமானவர் என்று கூறப்படுவதால் தான் இத்தனை பிரச்சனைகளும். ஆனால் தயாரிப்பாளர் வெளிநாட்டில் வாழும் ஈழத் தமிழர், அவருக்கும் ராஜபக்சேவுக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை என்று மீண்டும் மீண்டும் கூறி வருகிறது படக்குழு என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment