சென்னை: கே. பாலசந்தர் எழுதி இயக்கிய அந்துலேனி கதா படத்தில் ரஜினி தனது குடிகார தம்பியாக நடித்ததாக நடிகை ஜெயபிரதா தெரிவித்துள்ளார்.
ஒரு காலத்தில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி திரை உலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் ஜெயபிரதா. பின்னர் அரசியலுக்கு சென்றுவிட்டார். அவர் தற்போது தனது மகனை வைத்து உயிரே உயிரே படத்தை தயாரித்துக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் அவர் தனது திரை உலக பயணம் குறித்து கூறுகையில்,
கே. பாலசந்தர் எழுதி, இயக்கிய அந்துலேனி கதா என்ற தெலுங்கு படத்தில் நான் ஹீரோயினாக அறிமுகமானேன். அதில் ரஜினிகாந்த் என்னுடைய குடிகார தம்பியாக நடித்திருந்தார். சலங்கை ஒலி படத்தில் நான் இயல்பாக நடிக்க கமல் ஹாஸன் தான் மிகவும் உதவிகரமாக இருந்தார். அவர் தான் எனக்கு எப்படி அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார்.
என்னால் மறக்க முடியாத படம் என்றால் அது நினைத்தாலே இனிக்கும் தான் என்றார்.
Post a Comment