ஜிம்பாப்வேயில் நடைபெற உள்ள சர்வதேச திரைப்பட விழாவில் குற்றம் கடிதல் திரைப்பட திரையிடப்பட உள்ளது.
குழந்தைகளின் வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகி உள்ள படம் குற்றம் கடிதல்.
குழந்தைகளை குற்றவாளிகளாக அறிவித்து அவர்களின் வாழ்க்கையை நசுக்கிற கொடுமையை சொல்லும் படம். ஜி.பிரம்மா என்பவர் இயக்கி இருக்கிறார் எஸ்.மணிகண்டன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
சங்கர் ரங்கராஜன் இசை அமைத்துள்ளார். அஜய், ராதிகா, பிரசித்ரா, சாய் ஆகிய குழந்தை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். பசங்க, கோலிசோடா வரிசையில் வெற்றியும் பெறும்" என்கிறார் படத்தை வாங்கியுள்ள தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார்.
இந்த படம் வெளிவருவதற்கு முன்பே ஜிம்பாப்வேயில் நடைபெற இருக்கும் சர்வதேச படவிழாவிலும், மும்பையில் நடைபெற இருக்கும் 16வது எடிசன் திரைப்பட விழாவிலும் திரையிட தேர்வாகி இருக்கிறது.
அறிமுக இயக்குனரின் படம் என்கிற பகுதியில் இந்த இரண்டு திரைப்பட விழாக்களுக்கும் குற்றம் கடிதல் படம் தேர்வாகி உள்ளது. அடுத்த மாதம் தியேட்டர்களில் வெளியாக உள்ளது.
Post a Comment