சென்னை: பெயரில் தித்திப்பை வைத்துள்ள நடிகைக்கு மார்க்கெட் இல்லாததால் குத்தாட்டம் போட, வில்லி வேடத்தில் நடிக்க ஆர்வம் காட்டுகிறார்.
அண்டை மாநிலத்தில் இருந்து கோலிவுட் வந்தவர் பெயரில் தித்திப்பை வைத்திருக்கும் அந்த இளம் நடிகை. அவர் நடித்த முதல் படம் பல விருதுகளை பெற்றது. நடிகையின் நடிப்புத் திறனையும் பலரும் பாராட்டினார்கள்.
அழகும் உள்ளது, நடிக்கும் திறமையும் உள்ளது நடிகை நிச்சயம் ஒரு ரவுண்ட் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதன் பிறகு அவர் நடித்த படங்கள் எல்லாம் ஊத்திக் கொண்டன. இதனால் நடிகையை ஹீரோயினாக்க யாரும் விரும்பவில்லை. அதனால் வாய்ப்பும் இல்லை, வருமானமும் இல்லை.
அவர் தற்போது விளம்பரப் படங்களில் கவனம் செலுத்த துவங்கியுள்ளார். ஹீரோயின் வாய்ப்பு தான் என்று இல்லை நான் குத்தாட்டம் போடவும் தயாராக உள்ளேன் என்று நடிகை தெரிவித்துள்ளார். மேலும் வில்லி கதாபாத்திரங்களிலும் நடிக்க தான் தயாராக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
வசீகரிக்கும் அழகால் அனைவரையும் கவர்ந்த இந்த நடிகைக்கா இப்படி ஒரு அவல நிலை என்று தயாரிப்பாளர் ஒருவர் கவலை தெரிவித்துள்ளார்.
Post a Comment