திருவனந்தபுரம்: அட்வான்ஸ் வாங்கிய பிறகு படத்தில் நடிக்க மறுப்பதாக நடிகர் பகத் பாஸில் மீது பிரபல தயாரிப்பாளர் மணி புகார் கொடுத்துள்ளார்.
பகத் பாசில் மலையாளத்தில் முன்னணி நடிகராக இருக்கிறார். சமீபத்தில்தான் சக நடிகை நஸ்ரியாவை காதலித்து திருமணம் செய்தார்.
இப்போது பகத்பாசில் மீது மலையாள தயாரிப்பாளர் சங்கத்தில் பிரபல தயாரிப்பாளர் எம்.மணி புகார் அளித்துள்ளார்.
புகார் மனுவில், "பகத் பாசிலை எனது படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தேன். அந்த படத்துக்கு ஐயர் இன் பாகிஸ்தான் என பெயரிடப்பட்டிருந்தது.
இந்தப் படத்தில் நடிப்பதற்காக பகத் பாசிலுக்கு குறிப்பிட்ட தொகையை முன் பணமாக கொடுத்தேன். படப்பிடிப்பு துவங்கியுள்ளது. இந்த நிலையில் படத்தில் இருந்து பகத்பாசில் திடீரென விலகிவிட்டார். கதை எனக்கு பிடிக்கவில்லை எனவே நடிக்க முடியாது என்று கூறிவிட்டார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment